திருப்பூர்;'அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை முதல், ஐந்து நாட்களுக்கு
ஆன்லைன் வகுப்பு கிடையாது; மீறி நடத்தினால் நடவடிக்கை பாயும்' என மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.ஊரடங்கிலும் அரசு மற்றும்
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு நடைபெற்று வருகின்றன. இதனால்,
மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக,
செப்., 21 முதல், 25 வரை அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள்
நடத்தாமல், விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான
அரசாணை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சில தனியார் பள்ளிகள் செப்., 21 - 25ம்
தேதிகளில், மேற்கொள்ளப்படும் 'ஆன்லைன்' வகுப்பு குறித்த அட்டவணையை
மாணவர்களுக்கு அனுப்பி, பங்கேற்கும் படி வலியுறுத்தி வருகின்றன.
மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''தமிழக அரசின் உத்தரவின்படி, 21
முதல், 25ம் தேதி வரை எந்த இணையவழி வகுப்பு களும் நடத்தக்கூடாது. மாணவர்களை
நேரடியாக பள்ளிகளுக்கு வரச்சொல்லவும் கூடாது. விதிமீறும் பள்ளிகள் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...