1) இந்திய அரசியல் அமைப்பின் தலைவர்.
2) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்.
3) முதுகலை பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்று படித்த முதல் இந்தியர்.
4) லண்டனில் படித்து 'பாரிஸ்டர்'- பட்டம் பெற்ற முதல் நபர்.
5) வட்ட மேசை மாநாடுகளில் 'டாக்டர்' பட்டம் பெற்று கலந்துகொண்ட ஒரே நபர் அறிவுச்சுடர் அம்பேத்கர் மட்டுமே.
6) 3வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்து கொண்ட மாமனிதர்.
7)ஆசியாவிலேயே அதிக புத்தகங்களைப் படித்த ஒரே நபர்.
8) உலகத்திலேயே புத்தகங்களை பாதுகாப்பதற்காக நூலகத்தை வீட்டில் கட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே.
9)நவீன இந்தியாவின் நீர் மேலாண்மை பற்றி தொலைநோக்குடன் செயல்பட்ட மாபெரும் சிந்தனையாளர்.
10)1923 ல் 'இந்திய நாணயம் மற்றும் பொருளாதாரம் '-என்ற ஆய்வறிக்கை பின் 1935 ல் RBI வங்கி அமைவதற்கு அடிப்படை சாசனமாக அமைந்தது.
11) ஒரே நாளில் 18 மணி நேரத்திற்கு மேல் படித்த சாதனையாளர்.
12)1896 ஆம் ஆண்டு பீமாராவ், தாட் போலி ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
13) மும்பை எல்ஃபின் ஸ்டோன் பள்ளியில் உயர்நிலை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற முதல் மாணவர் இவர் மட்டுமே.
14) உலகத்திலே தண்ணீருக்காக சத்தியாகிரகம் செய்த முதல் தலைவர்.
15) பெண் உரிமை போராளி.. சம்பளத்துடன் கூடிய மகப் பேறு கால விடுப்பு வழங்க சட்டம் இயற்றியவர்.
16) பெண் தொழிலாளர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட கூடாது என்று தடை விதித்த ஆய்வாளர்.
17) நம் அனைவருக்கும் 8 மணி நேர வேலையை உறுதி செய்து கையொப்பம் இட்ட சட்ட மாமேதை.
18) ஆசியாவிலேயே மருத்துவ காப்பீட்டுத்திட்டம் தொழிலாளர் நலம் சார்ந்து உருவாக்கியவர்.
19) வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கியவர்.
20) புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு ஏழு மொழிகள் தெரியும்.
21) 11 தகுதிகள் உடைய "தமிழ் மொழியை "தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய மாமனிதர்.
22)அனைவருக்கும் மின்சார வசதியும் மின்சார வாரியம் அமைவதற்கும் வழிவகை செய்த நுண்ணறிவாளர்.
23) நூலகம் எங்கு உள்ளதோ அதன் அருகிலேயே தான் வீடு எடுத்து தங்குவார்.
24)கிடைக்கின்ற நேரங்களில் நூலகத்திற்கு முதல் நபராக உள்ளே சென்று கடைசி நபராக வெளியே வரும் சிந்தனையாளர்.
25) லண்டன் மியூசியம் தான் அம்பேத்கர் அவர்களின் அறிவு தாகத்தை தனித்து நூலகம்.
26) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை இயற்றியவர்.
27) குழந்தைக்கு 14 வயது வரை கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தவர்.
28) நில சீர்திருத்த சட்டம் நடைமுறை படுத்தியவர்.
29)அரசியல் சாசனம் எழுவதற்காக இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொண்ட ஆற்றலாளர்.
30) அரசியலமைப்புச் சட்டத்தை ஒற்றை நபராக எழுதிய மாபெரும் புரட்சியாளர்.
31)விதவை மறுமணச் சட்டம் மற்றும் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர்.
32)குழந்தைகளை தத்து எடுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர்.
33)புத்தம் ஏற்பதற்காக 10 ஆண்டுகள் புத்தகங்களை ஆராய்ச்சி செய்து பௌத்தம் ஏற்றுக் கொண்டவர்.
34)1922ல் 'ரூபாயின் பங்கீடு '-என்ற ஆய்வு கட்டுரை எழுதி அதனை சமர்ப்பித்து 'டாக்டர் ஆஃ சயன்ஸ் '-என்ற பட்டம் பெற்றவர்.
35) உலகப் பெயர் பெற்ற ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்தில் படித்தவர்.
36) மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றமைக்காக 1907ல் அம்பேத்கர் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
37) மூன்று கண்டங்களிலும் கல்வி பயின்ற ஒரே இந்திய நபர் சட்ட மாமேதை அம்பேத்கர் மட்டுமே.
38) மீராபாய் என்பவர் "அம்பேத்கரின் அத்தை "-அவர்தான் அம்பேத்கர் அவர்களுக்கு முடியை வெட்டி விடுவார்.
39)இரவில் அம்பேத்கர் படிக்கும் போது அவரது தந்தை ராம்ஜி சக்பால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பார்.
40) மாநில கவர்னர் களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்படுத்திய அறிவுஜீவி.
41) மத்திய தேர்தல் ஆணையத்தை உருவாக்கித் தந்த மாபெரும் அறிவுலக மாமேதை.
42) மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தவர்.
43)இந்தியாவில் இரண்டு மேதைகளை தான் அண்ணல் என்று அழைக்கின்றோம் ஒருவர் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றொருவர் காந்தியடிகள்.
44)1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர் தொழில் செய்ய தொடங்கினார்.
45) கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடந்து பள்ளிக்குச் சென்று படித்த விடிவெள்ளி.
46)MA பட்டப்படிப்பிற்கு அரசியல் ,விஞ்ஞானம் ,பொருளாதாரம் ,
சமூகவியல் மனோதத்துவம் ,ஆகிய பாடங்களை எடுத்துக் கொண்டார்.
47) கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1916 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேசிய பங்கு வீதம் என்னும் பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைக்கு முனைவர் பட்டம் பெற்றவர்.
48) கொத்தடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றியவர்.
49)தொழிலாளர்கள்பயன் பெறுகிற வகையில் இன்சூரன்ஸ், பிராவிடண்ட் பண்ட் ,முத்தரப்பு பேச்சு
வார்த்தை போன்றவர்களை சட்டம் ஆக்கியவர்.
50) இந்திய அளவில் பொருளாதாரத்திற்காக இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர் டாக்டர் அம்பேத்கர். இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை.
இவண்.
அ. அறிவுடைய நம்பி
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை கை.களத்தூர். வேப்பந்தட்டை வட்டம்.
பெரம்பலூர் மாவட்டம். தமிழ்நாடு.
பின்.621117.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் அறிந்து கொள்வோம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









