ஈரோடு
மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
நிருபர்களிடம் கூறியதாவது:-“தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு
பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார்
பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள்
ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடத்துக்கு அழைக்கப்படுவார்கள்.வாரத்தில் 6
நாட்கள் பள்ளிக்கூடங்கள் நடைபெறும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை
அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்படும்.
மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன்
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி,
அதற்கான அட்டவணை வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.பின்னர் நிருபர்கள்
கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் விவரம்
வருமாறு:-கேள்வி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட
பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என
கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்?’.பதில்: ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால் தான் மத்திய அரசு
கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும்’.
கேள்வி: மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா?.
பதில்: ‘பொறுத்திருந்து பாருங்கள்’.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...