தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு கூடுதலாக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவை விட அரசு பள்ளிக்கு மாணவர்கள் அதிகம் வந்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட மாணவர்கள் விருப்பத்தின் படி பள்ளிக்கு வர வேண்டும் எனவும், மாணவர்களின் வருகை பதிவைக் கணக்கிடத் தேவை இல்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...