இப்போது அவல் உப்புமா – எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். முதலில் அவலை தண்ணீர் ஊற்றி அலசியபின் 10 நிமிடங்கள் அப்படியே போட்டு வைக்கவும் . பின்பு பொரிகடலையை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும். அதைத்தொடர்ந்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து மிளகாய், தேங்காய்த்துறுவல் போட்டு வதக்கி கொள்ளவும். இதையடுத்து தேங்காய்த்துறுவல் பொன் நிறமாக வதங்கியதும் பொரிகடலை மாவு போட்டு கிளறி கொள்ளவும். தொடர்ந்து அவல், உப்புத்தூள் போட்டு நன்றாக கிளறி இறக்கி வைத்து விடவும். பின்னர் எடுத்து வைத்து பரிமாறவும்.









