நீட் தேர்வில் தனக்கு குறைவான மதிப்பெண் போடப்பட்டுள்ளதாக மாணவி தொடர்ந்த வழக்கில், அவர் எழுதிய விடைத்தாளை நேரில் காண உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் OMR விடைத்தாள்கள் மற்றும் கேள்விக்கான அனைத்து பதில்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களில் குளறுபடி உள்ளதாக கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் ஆன்லைனில் பார்த்ததில் 564 மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தேர்வு முடிவில் தனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மாணவி கூறியுள்ளார்.
மாணவியின் இந்த மனுவை ஏற்ற மதுரை கிளை உயர்நீதிமன்றம் அவர் தான் எழுதிய விடைத்தாளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...