தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை வரும் 8ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.