பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் :274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
விளக்கம்:
தவக்கோலத்தில்
மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து
கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.