திருக்குறள் :
அதிகாரம்: கேள்வி.
குறள் : 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
பொருள்:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
பழமொழி :
Diligence is the mother of good fortune
முயற்சி திருவினையாக்கும்.