அஞ்சல்
துறையில் பல்வேறு பணி இடங்களுக்குத்
தகுதி உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் அலுவலகக் கோட்டங்கள்,
அஞ்சல் பிரிப்பகக் கோட்டங்கள் / யூனிட்டுகள் மற்றும் இதர அஞ்சல்அலுவலகங்களில் உள்ள அஞ்சல் உதவியாளர்,
அஞ்சல் பிரிப்பக உதவியாளர், தபால்காரர் மற்றும் பல்வினைப் பணியாளர்
பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
· அஞ்சலக
உதவியாளர் / அஞ்சல் பிரிப்பக உதவியாளர்கள்:
ரூபாய் 5,200 - 20,200 + கிரேடு பே 2,400 + அனுமதிக்கப்பட்ட
படிகள்.
· தபால்காரர்:
ரூ. 5,200 - 20,200 + கிரேடு பே 2,000 அனுமதிக்கப்பட்ட
படிகள்.
· பல்வினைப்
பணியாளர் (விஜிஷி) ரூ.5,200 - 20,200 + கிரேடு
பே 1,800 + அனுமதிக்கப்பட்ட படிகள்.
அஞ்சல்
அலுவலகக் கோட்டங்கள், அஞ்சல் பிரிப்பகக் கோட்டங்கள்
/ யூனிட்டுகள் மற்றும் இதர அஞ்சல்
அலுவலகங்களின் முழு விவரம், காலி
இடங்கள், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும்
முறை, விண்ணப்பப் படிவங்கள் ஆகியவற்றை
www.tamilnadupost.nic.in என்ற
முகவரியுள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள்: 22.09.2014
விண்ணப்பிக்க விரும்பும் நபர் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களைப் பணியிடங்கள் காலியாக உள்ள சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவகத்திற்கோ, பிற அஞ்சல்-சார் அலுவலகத்திற்கோ மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அஞ்சல் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...