எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் சென்னையை சேர்ந்த ஒரே பள்ளி
மாணவ–மாணவிகள் 4 பேர் மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை
படைத்துள்ளனர்.
2–வது இடம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியை
சேர்ந்த மாணவிகள் எஸ்.சந்திரகமலா(498/500), ஜெ.நிஜஸ்ரீ(498/500),
மாணவர்கள் எஸ்.சஞ்சய்(498/500), எஸ்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் தமிழை முதன்மை
பாடமாக எடுத்து படித்ததில் மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை
படைத்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் தமிழ் பாடத்தில் மட்டும் 100–க்கு 2
மதிப்பெண்கள் குறைந்து 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மற்றபடி, ஆங்கிலம்,
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் சதம் கண்டு உள்ளனர்.
மாணவிகள் சந்திரகமலா– நிஜஸ்ரீ
மாணவி சந்திரகமலா வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை
சரவண சந்திரன் ரெயில்வே என்ஜீனியராக உள்ளார். தாயார் உமா இல்லத்தரசியாக
இருக்கிறார். சந்திரகமலா, ‘கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவதே தனது லட்சியம்’
என்றார்.
மாணவி நிஜஸ்ரீ திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர். அவருடைய
தந்தை ஜெகநாதன். தாயார் ஸ்ரீமதி. இருவரும் தனியார் நிறுவனத்தில்
பணியாற்றுகின்றனர். நிஜஸ்ரீ, ‘மருத்துவம் படிப்பதே தனது விரும்பம்’
என்றார்.
மாணவர்கள் சஞ்சய்–ஸ்ரீனிவாசன்
மாணவர் எஸ்.சஞ்சய் முகப்பேர் ஏரி தெருவை சேர்ந்தவர். அவருடைய தந்தை
சுந்தர் என்ஜீனியராக உள்ளார். தாயார் ஜெயந்தி இல்லத்தரசியாக உள்ளார்.
சஞ்சய், ‘மருத்துவம் படித்து ஏழை–எளிய மக்களுக்கு சேவை செய்வேன்’ என்றார்.
மாணவர்
எஸ்.ஸ்ரீனிவாசன் நாதமுனி முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை
ஆர்.சிவகுமார் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். தாயார் மைதிலி
இல்லத்தரசியாக இருக்கிறார். ஸ்ரீனிவாசன், ‘சார்ட்டர்டு
அக்கவுண்டண்ட்(சி.ஏ.) படிப்பதே தனது லட்சியம்’ என்றார்.
மாணவி தர்ம ஷாம் வர்தினி
சென்னை அண்ணாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்சி மோசஸ் மெட்ரிக்குலேசன்
பள்ளி மாணவி யு.தர்ம ஷாம் வர்தினி(498/500) மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் 2–வது இடம் பிடித்துள்ளார். தமிழ் பாடத்தில் மட்டும் 2 மதிப்பெண்கள்
குறைந்துள்ளார். மற்ற அனைத்து பாடங்களிலும் 100–க்கு 100 மதிப்பெண்கள்
வாங்கி உள்ளார்.
மாணவி தர்ம ஷாம் வர்தினி அண்ணாநகர் பகுதியில்
வசிக்கிறார். அவருடைய தந்தை உதயகுமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி
வருகிறார். தாயார் ஆனந்தி இல்லத்தரசியாக உள்ளார். தர்ம ஹாம் வர்தினி,
‘மருத்துவம் படித்து அந்த துறையில் சிறந்து விளங்குவேன்’ என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...