இசை, கவின் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பங்கள் இந்த மாத இறுதி வாரத்தில்
விநியோகம் செய்யப்படும் என்று துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.சென்னை, அடையாறிலுள்ள தமிழ்நாடு இசை,கவின் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பி.ஏ.
சினிமா, எம்.ஏ. சினிமா போன்ற புதிய பட்டப் படிப்புகள் உலகிலேயே இந்தப்
பல்கலைக்கழகத்தில்தான் முதன்முதலாகத் தொடங்கப்படுகிறது.
ஏற்கெனவே,
எம்.ஏ. குரலிசை, பரத நாட்டியம், வீணை, மிருதங்கம் போன்ற பட்ட
மேற்படிப்புகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இத்துடன் ஆராய்ச்சிப்
படிப்புகளும் உள்ளன. இதைத் தொடர்ந்து பேஷன் உள்பட 9 புதிய படிப்புகளை
விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இசை, கலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே இறுதி வாரத்தில் விநியோகம் செய்யப்படும்.
ஏழை மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பல்கலைக்கழகத்தில் மிகக் குறைந்த அளவில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரியை இசைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி செய்தித் துறையின் கீழ் செயல்படுகிறது. எனவே, அதுபற்றி தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...