நான் படித்த வரலாற்றில் ஒரு சில தமிழர்கள் தான் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்,..
1. பாரதி - புதுமை கவிஞன் .... அவரது பாடல்கள் நமது இரத்தத்தை
சூடேற்றும்...உயர்குடியில் பிறந்தாலும் சாதியை எதிர்த்து துணிந்து பாடிய
முதல் கவிஞன் ...
2. காமராசர் - தான் மரிக்கும்போது தனது
சட்டைப்பையில் 7 ரூபாய் மட்டும் வைத்திருந்தாராம்... சில கதர் சட்டைகளும் ,
நாலு முழ வேட்டிகளும் தான் அவரது சொந்தம்...இப்படி ஒரு முதல்வரை கூட
தோற்கடித்த தமிழனை என்னவென்று சொல்வது?....
3. கக்கன் - தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தனது அறிவால் அமைச்சர்
பதவியை பிடித்தவர் .. உலகிலேயே எந்த அமைச்சரும் , அமைச்சராக இருக்கும்போது
வந்த நோய்க்கு , அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாக வரலாறு இல்லை...
ஆனால் கக்கன் அமைச்சராக இருக்கும்போது அரசு மருத்துவ மனையில் சிகிச்சை
எடுத்தார்...அங்கேயே உயிர் பிரிந்தது...
4. அண்ணா - நாலு முழ
வேட்டிக்கும் , மக்களின் அன்புக்கும் மட்டும் சொந்த காரர்,... காமராசரையே
வீழ்த்தும் அளவுக்கு மக்களை வசீகரம் பண்ணியவர்.. ஆனால் நமது துரதிர்ஷ்டம்,
இவர் பதவி ஏற்ற 2 வருடத்திலேயே புற்றுநோயால் மரணித்தார்... இவர்
மரணிக்கும்போது இவருக்கென்று எந்த சொத்தும் கிடையாது....
5. கலாம் -
படிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானம் , குடியரசு தலைவர், எழுத்தாளர் இப்படி
பன்முகம் கொண்ட தமிழர்... மக்கள் குடியரசு தலைவர் என்று இன்று அனைத்து
ஊடகங்களாலும் அன்பாக அழைக்கபடுகிறார்... வெறும் கையினராய் , குடியரசு
மாளிகை சென்றார்... வெறும் கையினாராய் , புன்முறுவலை மட்டும் சுமந்துகொண்டு
பதவி காலம் முடிந்தபின் குடியரசு மாளிகையில் இருந்து வெளியே வந்தார் ... [
நாம் யார் யாரையெல்லாமோ HERO என்று கொண்டாடுகிறோம்.. கருப்பு பணத்தில்
குளிக்கும் ஹீரோக்களுக்கு , பாலாபிஷேகம் பண்ணுகிறார்கள் இன்றைய
இளைஞர்கள்... இளைஞர்களே யார் HERO என்று நினைத்து பாருங்கள்... தமிழகத்தின்
உண்மையான HERO க்கள் புதுமை கவிஞர் பாரதி, கர்மவீரர் காமராசர், எளிமையின்
திருவுருவம் கக்கன், பேரறிஞர் அண்ணா மற்றும் புன்னகை மன்னன் கலாம் ஆகியோர்
தான்..Thanks to Charles Immanuel
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...