மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அறிக்கை, அடுத்த
மாதம்(செப்.,) தாக்கல் செய்யப்படவுள்ளதாக, நீதிபதி ஏ.கே.மாத்துார்
அறிவித்துள்ளார். இக்கமிஷனின் பரிந்துரைகள் 2016 ஜன., 1 முதல் அமலுக்கு
வரவுள்ளது.நீதிபதி ஏ.கே.மாத்துார் தலைமையிலான 7வது சம்பள
கமிஷன், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், 55 லட்சம்
ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக முந்தைய
மன்மோகன்சிங் ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. நேற்று செய்தியாளர்களை
சந்தித்த அவர், அடுத்த மாதம்(செப்.,) 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்
செய்யப்படும் என, ஏ.கே.மாத்துார் தெரிவித்தார்.
அதற்காக
தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் 7வது சம்பள கமிஷன்
ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், கமிஷனின் பரிந்துரைகள், 2016 ஜன., 1 முதல்
அமலுக்கு வரவுள்ளதாக கூறினார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன்
மாற்றி அமைப்பது வழக்கமாகும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...