மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றுதமிழக அரசு
அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர்
மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்
திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர்-
பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி
ஆசிரியர்-துணைவிடுதிக் காப்பாளர் பணியிடங்கள் சில காலியாகவுள்ளன. தகுதி
வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும்
வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதி
வரை அனுப்பலாம். இந்தப் பணியிடங்கள் குறித்த அனைத்து அறிவுரைகள்,
விவரங்கள்-மாதிரி விண்ணப்பத்தினை www.tn.gov.in, www.scd.tn.gov.in என்ற
இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...