சீனாவில், ஊதிய விகிதம் உயர்ந்து வருவதன் எதிரொலியாக, இந்திய ஆயத்த
ஆடைகள் துறையில், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, உலக
வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:சீனாவில், ஊதிய விகிதம் அதிகரித்து வருவதால், ஆயத்த
ஆடைகள் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளது. இது, இளம் வயது தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்தியாவிற்கு, குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை வழங்கும். இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும். சீன ஆயத்த ஆடைகளின் விலை, 10 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர். குறிப்பாக, இத்துறையில் பெண்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் அதிக அளவில் பயனடைவர்.சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதியம், 1 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழிலாளர்களின் பங்கு, 18.9 சதவீதம் உயரும். இந்த வாய்ப்பை, இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டு, ஆயத்த ஆடை தயாரிப்பிற்கான செயற்கை நுாலிழை இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அத்துடன், உள்நாட்டு செயற்கை நுாலிழை தயாரிப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி வரி குறைப்பு அல்லது பிற சலுகைகளை வழங்க வேண்டும். இதன் மூலம், செயற்கை நுாலிழையில் தயாராகும் ஆயத்த ஆடைகளின் உற்பத்தி செலவு குறையும்; ஏற்றுமதி அதிகரிக்கும். ஆயத்த ஆடைகள் விலை உயர்வால், சீனா இழக்கும் சர்வதேச வாடிக்கையாளர்களை, இந்தியாவால் ஈர்க்க முடியும்.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், சீனா முதலிடத்தில் உள்ளது. இருந்தபோதிலும், அதன் ஏற்றுமதி குறைந்து வருகிறது. கடந்த, 1990ல், சீனாவின் ஏற்றுமதியில், 15.6 சதவீதமாக இருந்த ஆயத்த ஆடைகள் பிரிவு, 2012ல், 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, வளமான ஏற்றுமதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியா துரிதமாக செயல்பட்டு, செயற்கை நுாலிழையை சுலபமாக இறக்குமதி செய்வது, வரிகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிக அளவில் ஆயத்த ஆடைகள் துறையில், அன்னிய முதலீடு குவியும் என்பதுடன், சீனாவுடன் போட்டியிடும் வகையில், காலணி, பொம்மை போன்ற இதர தயாரிப்பு துறைகளும் வளர்ச்சி காணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதியம், 1 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழிலாளர்களின் பங்கு, 18.9 சதவீதம் உயரும்.
அதன் விவரம்:சீனாவில், ஊதிய விகிதம் அதிகரித்து வருவதால், ஆயத்த
ஆடைகள் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளது. இது, இளம் வயது தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்தியாவிற்கு, குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை வழங்கும். இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும். சீன ஆயத்த ஆடைகளின் விலை, 10 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர். குறிப்பாக, இத்துறையில் பெண்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் அதிக அளவில் பயனடைவர்.சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதியம், 1 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழிலாளர்களின் பங்கு, 18.9 சதவீதம் உயரும். இந்த வாய்ப்பை, இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டு, ஆயத்த ஆடை தயாரிப்பிற்கான செயற்கை நுாலிழை இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அத்துடன், உள்நாட்டு செயற்கை நுாலிழை தயாரிப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி வரி குறைப்பு அல்லது பிற சலுகைகளை வழங்க வேண்டும். இதன் மூலம், செயற்கை நுாலிழையில் தயாராகும் ஆயத்த ஆடைகளின் உற்பத்தி செலவு குறையும்; ஏற்றுமதி அதிகரிக்கும். ஆயத்த ஆடைகள் விலை உயர்வால், சீனா இழக்கும் சர்வதேச வாடிக்கையாளர்களை, இந்தியாவால் ஈர்க்க முடியும்.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், சீனா முதலிடத்தில் உள்ளது. இருந்தபோதிலும், அதன் ஏற்றுமதி குறைந்து வருகிறது. கடந்த, 1990ல், சீனாவின் ஏற்றுமதியில், 15.6 சதவீதமாக இருந்த ஆயத்த ஆடைகள் பிரிவு, 2012ல், 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, வளமான ஏற்றுமதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியா துரிதமாக செயல்பட்டு, செயற்கை நுாலிழையை சுலபமாக இறக்குமதி செய்வது, வரிகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிக அளவில் ஆயத்த ஆடைகள் துறையில், அன்னிய முதலீடு குவியும் என்பதுடன், சீனாவுடன் போட்டியிடும் வகையில், காலணி, பொம்மை போன்ற இதர தயாரிப்பு துறைகளும் வளர்ச்சி காணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதியம், 1 சதவீதம் உயர்ந்தால் கூட, இந்திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழிலாளர்களின் பங்கு, 18.9 சதவீதம் உயரும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...