அற்புதமான அரசுப்பள்ளிகள் :
உலக புத்தக தினத்தன்று உலக சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில்(ASSIST WORLD RECORDS & RECORD RAISERS) இடம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் நேற்று திருவண்ணாமலை மாவட்டம்,
வெம்பாக்கம் ஒன்றியம், தண்டப்பந்தாங்கல், ஊ.ஒ.ந.பள்ளியில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்புமிகு.திருமதி. ஜோதி அவர்களால் வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டது. இச்சாதனை படைத்தோர் அக்கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் என்பதும், மேலும் நரசமங்கலம் ஆசிரியர் அடியேன் மற்றும் எனது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர் பயிற்றுநர். திரு.கார்த்திகேயன், தலைமையாசிரியர் திரு.உலகநாதன், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு வாழ்த்தி, பாராட்டினர். மேலும் மாணவிகளின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியை திருமதி.மஞ்சுளா அவர்களுக்கு எமது சாதனை குடும்பத்தின் சார்பில் சமுதாய சிற்பி என்ற விருதும் வழங்கப்பட்டது. உலக புத்தக தினத்தன்று உலக சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில்(ASSIST WORLD RECORDS & RECORD RAISERS) இடம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் நேற்று திருவண்ணாமலை மாவட்டம்,
- கோகுலராஜ்,
58 உலக சாதனைகளை உருவாக்கிய ஆசிரியர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...