மாநில அரசின் கல்வி உதவித் தொகை அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரப்பினர் மாணவ மாணவிகள் அரசு வழங்கும் உதவித்தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்
தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு தமிழக
அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பி.சி.,
எம்.பி.சி., மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையின்றி
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற
படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம், 1 லட்ச
ரூபாயுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள்
படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன்
கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.