7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
தொடக்க கல்வி
ஆசிரியர்கள் பிப்ரவரி 2 தேதி போராட்டம் நடத்த
முடிவு செய்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு
தொடக்க கல்வி
ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கை
குழுவின் சார்பில்
பாலசந்தர் சென்னையில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசுக்கு
இணையான ஊதியத்தை
இடைநிலை ஆசிரியர்களுக்கு
வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக போரட்டம் நடத்திவருகிறேம்.
தேர்தல் காலத்தில்
அதிமுக எங்கள்
கோரிக்கை நிறைவேற்றுவதாக
தங்களுடைய தேர்தல்
அறிக்கையில் குறிப்பிட்டனர். ஆனால் அரசு இதுவரை
எந்தவிதமான முடிவையும் அறிவிக்கவில்லை.
தமிழ்வழி கல்வி
தொடர வேண்டும்.
தன் பங்கேற்பு
ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் .ஆசிரியரி
தகுதி தேர்வை
ரத்துசெய்யவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச
கோரிக்கையை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்
அலுவலகம் முன்பு
அடுத்த மாதம்
(பிப்ரவரி) 2 ம் தேதி போராட்டம் நடத்த
நாங்கள் முடிவு
செய்துள்ளோம்.எங்கள் பிரச்சனைகள் குறித்து பேச
முதல்வரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...