சிவகங்கை தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கடிதம் பெற்று, தேர்வு எழுத தடை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு எழுத வந்த சுதாகர், மணிகண்ட பிரபு, நவீன்குமார், நவநீதகிருஷ்ணன், சுரேஷ், தினேஷ், ஆனந்தகுமார், அரவிந்த்குமார், பாலமுருகன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் விசாரித்தபோது, "ஒன்பது
பேரையும் தேர்வு எழுத, பள்ளி நிர்வாகமே அனுமதிக்கவில்லை. அவர்கள் பெயரை
தேர்வுத்துறைக்கு அனுப்பவில்லை' என தெரிந்தது.
கலெக்டர் ராஜாராமன், முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கையால் ஆறு பேர் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற மூன்று மாணவர்களும், நேற்று காலை, தமிழ் 2ம் தாள் தேர்வு எழுதச்
சென்றபோது, கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. மூவரும் முதன்மைக்கல்வி
அலுவலரிடம் புகார்
செய்தனர்.
இந்நிலையில், அதே பள்ளி மாணவர்கள் அர்ச்சுனன், கதிரவன் ஆகியோர், "எங்களை
ஆங்கிலம், கணக்கு தேர்வை எழுதவிடாமல் பள்ளி நிர்வாகம் கடிதம் எழுதி
வாங்கியுள்ளது' என, முதன்மைக்கல்வி அலுவலரிடம், நேற்று புகார் செய்தனர்.
அர்ச்சுனன் கூறுகையில், ""ஆங்கிலத்தில் சுமாராக படிப்பதால், "அடுத்தமுறை
தேர்வு எழுத சம்மதிக்கிறேன்' என, என்னிடம் வற்புறுத்தி, பள்ளி
நிர்வாகத்தினர் கடிதம் வாங்கினர். வேறு வழியின்றி எழுதி கொடுத்தேன்,''
என்றார்.
கதிரவன் கூறுகையில், ""கணக்குப் பாடத்தில் தோல்வி அடைவேன் என, அவர்களாகவே கருதி என்னிடம் எழுதி வாங்கினர்,'' என்றார்.
இவர்கள் இருவரும், தமிழ் முதல் தாள் தேர்வு எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...