தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 9ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 69 மையங்களில், 27 ஆயிரத்து, 606 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், ஆறு இடங்களில், பத்து வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 20 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதிட, 26 பேர் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால்
பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவ, மாணவிகளில்,
தேர்வுக்கு முன்னதாகவே, டிஸ்லெக்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட
மாணவர்கள் தேர்வு செய்யப்பட்னர். அவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம்
தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது, என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...