இறந்துபோன மனைவியின் பணப்பலனை கேட்க விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவருக்கு உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 30 March 2014

இறந்துபோன மனைவியின் பணப்பலனை கேட்க விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவருக்கு உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு:

இறந்துபோன மனைவியின் பணப்பலன்களைக் கேட்க விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவனுக்கு தார்மிக உரிமை இல்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

கருத்து வேறுபாடு
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக காஞ்சனா 1993–ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் பின்னர் வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். 1996–ம் ஆண்டு பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் நடந்து சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக காஞ்சனா தனது தாய்வீட்டுக்கு திரும்பிவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. காஞ்சனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் 2007–ம் ஆண்டு பிரகாஷ் வழக்கு தாக்கல் செய்தார்.
கணவனின் ஆட்சேபனை
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் காஞ்சனா 2011–ம் ஆண்டு மரணமடைந்தார். எனவே காஞ்சனாவின் தாயார் பிரேமாவதி, குடும்பநல நிதி போன்ற தனது மகளுக்கான பணப்பலன்களை தனக்கு வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்தார். இதற்கு பிரகாஷ் ஆட்சேபனை தெரிவித்தார். எனவே மகளின் பணப்பயன் எதுவும் பிரேமாவதிக்கு வழங்கப்படவில்லை.
எனவே ஐகோர்ட்டில் பிரேமாவதி வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் சிராஜுதீன் ஆஜரானார். அரசு படிவத்தில் தனக்கு பின்பு பலனை அனுபவிக்கும் நபராக (நாமினி) தாயார் பிரேமாவதியை காஞ்சனா காட்டியிருப்பதால், அவருக்கே அனைத்து பணப்பயன்களையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
தார்மிக உரிமையும் இல்லை
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பு வருமாறு:–
நாமினி நியமன படிவத்தில் தாயாரின் பெயரைத்தான் காஞ்சனா குறிப்பிட்டுள்ளார். அதை அவர் மாற்றவில்லை. எனவே அவரது பணப்பயன்களை கணவர் கேட்க சட்டப்பூர்வமான உரிமை இல்லை.
வாழும்போது காஞ்சனாவை மனைவியாக கணவர் பிரகாஷ் ஏற்கவில்லை. அந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருக்கிறார். எனவே மனைவி இறந்த பிறகு அவரது பணப்பயனை பெறுவதற்கு கணவருக்கு தார்மிக உரிமையும் இல்லை.
எனவே பணப்பயன்களை காஞ்சனாவின் தாயாருக்கு வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டு காலமாக வழக்கை தாமதப்படுத்தியதால் அவருக்கு ரூ.10 ஆயிரத்தை வழக்கு செலவாக வருவாய்த்துறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H