விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.04.2014) தேர்தல் பயிற்சிவகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு கள்ளக்குறிச்சி பகுதியை சார்ந்த ஆசிரியர்களை செஞ்சி,திண்டிவனம் மற்றும் வானூர் பகுதியிலும் , அப்பகுதியில் உள்ளவர்களை கள்ளகுறிச்சி,சங்கராபுரம் ,ரிஷிவந்தயம்போன்ற பகுதியிலும்பயிற்சி கொடுத்தனர். சுமார் 100 கி.மீ தாண்டி ஆசிரியர்களை தேர்தல் பயிற்சிக்கு உட்படுத்தியதால்இந்த கோடை வெப்பத்தில் ஆசிரியர்கள் பெரும்சிரமத்திற்கு உள்ளானார்கள. இதற்கிடையில் இன்னும் இரண்டு பயிற்சிகள் இவ்வாறே நடைபெறும் எனறும் அடுத்த பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு நடைபெறும் என கூறியவுடன்ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பை புறக்கணித்து விளையாட்டு திடலில் கூடிஅடுத்த பயிற்சி வகுப்பு இங்கு வேண்டாம் என்றும்,வரும் 23ந்தேதி ஆணையை பெற்று தேர்தல் பணிக்கு செல்கின்றோம் என்றும் கோசமிட்டனர்.உடன் தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஆசிரியர்களின்கோரிக்கைஏற்றுக்கொண்டு.
23ந்தேதி பயிற்சிக்கு வர அனுமதித்தனர்.இதனால் அனைத்து ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் பயிற்சி பெற்று மாலை 5மணி அளவில் விடைபெற்றனர்.
கீழே உள்ள படங்கள் செஞ்சி ராஜா தேசிங்கு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பினை விட்டு வெளியேறி ஆசிரியர்கள் திடலில் கோசமிட்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...