நேபாளத்தில் சிக்கிய தமிழக மருத்துவ மாணவர்கள் உயிர் பயத்தில் தவிப்பு; வெட்ட வெளியில் தஞ்சம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நேபாளத்தில் சிக்கிய தமிழக மருத்துவ மாணவர்கள் உயிர் பயத்தில் தவிப்பு; வெட்ட வெளியில் தஞ்சம்:

மதுரை உட்பட தமிழகத்தை சேர்ந்த நேபாளத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் நான்கு மாணவர்கள் நிலநடுக்கம் பாதித்த பகுதியில் சிக்கி தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை சூர்யாநகரை சேர்ந்தவர் அப்துல் கரீம். சித்தா டாக்டர். இவரது மனைவி சமீமா. இவர்களின் ஒரே மகள் அனிஷ் பாத்திமா. இவர் நேபாளம் பாங்கோ மாவட்டத்திலுள்ள நேபாள் கன்ஞ்ச் மெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கிறார்.நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் உட்பட 300 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்ட பின் அனைவரும் உயிர் பயத்தில் அலறி அடித்துக் வெளியேறினேர்.இச்சம்பவம் குறித்து மதுரையிலுள்ள பெற்றோரிடம் அனிஷ் பாத்திமாவால் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாததால், மறுநாள் 'வாட்ஸ்அப்' மூலம் தகவல் தெரிவித்து தன்னை மீட்குமாறு கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அப்துல்கரீம்-சமீமா கூறியதாவது:மகள் குறித்து தகவல் அறிய பல்வேறு வழிகளில் முயன்றும் முடியாததால் விரக்தியின் உச்சத்திற்கு சென்றோம். மறுநாள் வாட்ஸ் அப் மூலம் அவரே தொடர்பு கொண்டு பேசியதால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம். அவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சம்மந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி இந்திய எல்லையின் ருபைதியாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சிஷாம்பாணி என்ற இடத்தில் உள்ளது. இந்த 200 கிலோ மீட்டரை கார் அல்லது மினி விமானம் மூலம் தான் கடக்க வேண்டும். அங்கிருந்து விமானம் மூலம் லக்னோ வழியாக டெல்லி வர வேண்டும். இன்று காலை 4.30 மணிக்கு காரில் பயணித்து லக்னோ வரும் அவர், விமானம் மூலம் மதியம் 3.05 மணிக்கு டில்லி வந்து அங்கிருந்து சென்னை வருகிறார்.இன்னும் அங்கு நிலநடுக்கம் அவ்வப்போது தொடர்வதால் 200 கிலோ மீட்டர் காரில் பயணிப்பது மட்டும் சவாலாக இருக்கும். இறைவன் கருணையால் அவர் வருவார், என்றனர் கண்ணீருடன்.மேலும் 3 பேர்: இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த நாகராஜன் மகள் அனுஸ்ரீ, மதுரை, நாமக்கல்லை சேர்ந்த மாணவர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் இந்த மருத்துவ பல்கலை படிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கெஞ்சி கேட்டு அனுமதி :
நிலநடுக்கம் குறித்து தகவல் வெளியான பின் அனிஷ்பாத்திமாவிடம் அப்துல் கரீம் பேசினார். அப்போது அவர் நிலநடுக்கத்தை நேரில் பார்த்த அதிர்ச்சி நீங்காதவராக பதில் அளித்தார். இதுகுறித்து சமீமா கூறுகையில், "கண் முன் கட்டடங்கள் இடிந்து விழுவதை பார்த்த அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் பதட்டத்துடன் பேசினார்.
மிகவும் அச்சத்தில் உள்ள அவரை அங்கிருந்து அழைத்துவருவது குறித்து பேசும் போது கல்லூரி நிர்வாகம் அனுப்ப முடியாது என முதலில் தெரிவித்தது. எங்களுக்கு ஒரே பெண் தான் என கெஞ்சி கேட்டவுடன் அனுமதி அளித்தது. அதன் பின் தான் விமான டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்தோம். இன்று இரவு 8 மணிக்குள் மதுரை வருவார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஒரே நாளில் 20 முறை நில அதிர்வு -'வாட்ஸ்அப்' மூலம் தினமலர் நாளிதழுக்கு பேசிய மதுரை மாணவிகள் : 'ஒரே நாளில் 20 முறை நிலஅதிர்வை உணர்ந்தோம்" என நேபாளத்தில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவிகள் அனிஷ் பாத்திமா, அனுஸ்ரீ ஆகியோர் 'வாட்ஸ்அப்' மூலம் தினமலர் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.
அங்குள்ள நிலைமை குறித்து அவர்கள் கூறியதாவது:தற்போது வரை பாதுகாப்பாக உள்ளோம். முதல் நாளில் காலை 11 மணியளவில் கல்லூரி விடுதியில் இரண்டாம் தளத்தில் தங்கியிருந்தோம். பல்வேறு நாடுகளை சேர்ந்த 300 மாணவர்கள் தங்கியுள்ளோம். நாங்கள் நின்று கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட முதல் அதிர்வால் நிலை தடுமாறினோம். அப்போது எங்கள் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதன் பின் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே எங்களால் உணர முடிந்தது.விடுதியில் உள்ள மாணவ மாணவியர் அனைவரும் உயிர் பயத்தில் கூச்சலிட்டு ஒட்டுமொத்தமாக சில நிமிடங்களில் அறைகளை விட்டு வெளியேறி வெளி மைதானத்திற்கு வந்தோம். மதியம் ஒரு மணி வரை 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தோம். ரோடுகள், தரைப் பகுதிகள் என பார்க்கும் இடங்களிலெல்லாம் பள்ளங்கள் ஏற்பட்டன. கண் முன் எதிரே உள்ள கட்டடங்கள் அப்படியே இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து அதிர்வு இருந்து கொண்டே உள்ளது. (சிக்னல் இல்லாததால் தொடர்பு 'கட்' ஆனது.. இதன் பின்) இதனால் இரண்டு நாட்களாக திறந்த வெளியில் தான் தங்கியுள்ளோம். 15 நாட்களுக்கு நில அதிர்வு இருக்கும் என கூறுகின்றனர். இதனால் உயிர் பயத்தில் உள்ளோம். இறைவன் அருளால் தான் நாங்கள் உயிர் பிழைத்தோம். கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில் தமிழகம் திரும்ப விரும்புகிறோம். எங்கள் பெற்றோர் முயற்சி செய்கின்றனர். அரசும் இதில் முழு வீச்சில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H