இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போதுகேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி.,க்களில் இருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.
கடந்த 2014 -15ம் ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.. 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதில் ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் இருந்து 209 பேரும், டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். மாண்டி, ஜோத்பூர், கான்பூர், சென்னை ஐ.ஐ.டி.,யில் இருந்து எந்த மாணவரும் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை.
கடந்த 2014-15ல் 717 மாணவர்களும். 2013-14ல் 785 மாணவர்களும், 2012-13ல் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டி.,க்களும், 30 என்.ஐ.டி.,க்களும் உள்ளன.








