சட்டசபையில் செப்., 1ல் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.
அப்போது தங்களுக்குரிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற
நம்பிக்கையுடன் போலீசார் காத்திருக்கின்றனர்.சொந்த வீடு திட்டம் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களை போலீசாருக்காக கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா
செயல்படுத்தினார்.
அதேபோல், வரும் 5 ஆண்டுகளிலும் தங்களது
கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார் என போலீசார் நம்புகின்றனர். அதற்கேற்ப,
கோரிக்கைகள் குறித்து டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து விபரங்கள்
கேட்கப்பட்டுள்ளன.
போலீசார் கூறியதாவது:போலீஸ் பணியில்
சேரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 + 1900 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டேஷன்களில் பணிபுரியும் டேட்டா என்ட்ரி
ஆப்பரேட்டர்களுக்கு சம்பளம் 5200+2400 வழங்கப்படுகிறது.
பட்டாலியன்
படை போலீசாருக்கு ஆண்டுக்கு 22 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,
ஸ்டேஷன், ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு 12 நாட்கள்தான் விடுமுறை
அளிக்கப்படுகிறது. ஆள் பற்றாக்குறையால் அந்த விடுமுறையைகூட எடுக்க
முடிவதில்லை. விடுமுறை எடுக்காத நாட்களை கணக்கிட்டு சம்பளம் வழங்க
வேண்டும். 12 நாட்களுக்கு பதில் 22 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். ஏழு
நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால், மிகைநேர ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.200
வழங்க வேண்டும். டிராவல் அலவன்ஸ் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக
அதிகரிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் உள்ளது போல், அரசு விடுமுறை
நாட்களில் பணிபுரிந்தால், அந்நாளுக்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பார் என
நம்புகிறோம், என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...