குழந்தைகள் தற்கொலை! வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.
தற்கொலைக்கான காரணங்கள் வயதோடு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தாலும் எல்லா வயதினரிடமும் இந்தப் போக்கு நிலவுகிறது. குழந்தைகள், பதின்ம வயதினர், வயோதிகர்கள் ஆகிய மூவரிடமும் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைப் பருவம் என்றால் மகிழ்ச்சியானதுதானே? என்கிற சமூகப் பார்வையை குழந்தைப் பருவத்தில் நடக்கும் தற்கொலைகள் மறுதலிக்கின்றன. பெரிதுபடுத்தப்படும் தற்கொலைச் செய்திகள் பதின்மப் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலை நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய தற்கொலையே அதிகமாக இருக்கிறது.