அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வரும் 13ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் என-
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு... தேதி அறிவிப்பு..
அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்
கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன. இந்தியாவும்
கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள்
மூடப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. தொற்று நோய் பரவி வரும்
சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது நடக்காத காரியமாக இருக்கிறது. இதனால் சில
மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத்
தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான
சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன்
கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார்
பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம்
கற்பிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...