கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு
முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க
தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும்
பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில்
பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது
இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக்
கொள்கிறார்கள்.
அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த
உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள்
முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல
பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற
இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள்
மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.
இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை
மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர
நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.
இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை
போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து
சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு,
மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல்
பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு
சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை
இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த
பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும்
அமைகின்றன.
ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன்
மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள்
பார்வை மங்கத் தொடங்கியது.
இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை
இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது
கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண
முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால்
மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக
சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள்
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...