விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே அரசு பள்ளி பிளஸ்2 மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அருகே மல்லிகைபட்டு கிராமத்தில் வசிப்பவர் பெருமாள், கூலி தொழிலாளி.
இவரது மகள் அஸ்வினி (17) மாம்பழப்பட்டு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்
பிளஸ்2 படித்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளி வகுப்பறையில் மாணவி
அஸ்வினி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக மாணவிகள், ஆசிரியர்கள்
அருகே உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு
மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவியிடம்
விசாரித்தபோது, பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர்
மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக
தெரிவித்தனர். இதுகுறித்து காணை போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று
மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து சக மாணவிகள்,
ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...