மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநில அளவில் நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் நடத்துதல் ஆணை வழங்குதல்
மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப்
பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு திட்டமிட்டு மாதந்தோறும்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,
நவம்பர் மாதத்தில் மாநில அளவில் (CRC) பயிற்சியானது அனைத்து மாவட்டங்களில்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு
பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மதுரை மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும்
இராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவன முதல்வர் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான உத்தேச
செலவினத் தொகை நேரடியாக தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாகிறது.