சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் அதிகரிக்க ஆய்வு:
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியை தவிர, பிற கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, 100ஐ தாண்டி விட்டது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில், 75 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர்.
இக்கல்லூரியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, 20 ஆண்டாக, கோரிக்கை
வைக்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது
குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், பஞ்சாப் குருகோவிந்த்
சிங் மருத்துவக் கல்லூரி, அறுவை சிகிச்சை துறைத் தலைவர், டாக்டர் ஹரிந்தர்
பால்சிங் சாந்து, ரெய்ப்பூர் ஜெ.எம்.எம். மருத்துவக் கல்லூரி நோய்
குறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ரேணுகா ஆகியோர், நேற்று ஆய்வு
நடத்தினர்.
டீன் டாக்டர் வள்ளிநாயகம், அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர்
கட்டபொம்மன், டாக்டர்கள் ராஜசேகர், தனபால், சுந்தரவேல் உட்பட அனைத்து
துறைத் தலைவர்களும் உடன் இருந்தனர்.
நேற்று காலை, அரசு மருத்துவமனையின் ஒவ்வொரு துறையிலும் அளிக்கப்படும்
சிகிச்சை விபரங்கள் நோயாளிகளின் எண்ணிக்கை, அடிப்படை வசதி, உள்கட்டமைப்பு
ஆகியவற்றை, ஆய்வு நடத்தினர். மாலையில், இரும்பாலையில் உள்ள மருத்துவக்
கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இன்றும் ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வு முடிந்து, மாணவர் எண்ணிக்கை
அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், இந்த பணி,
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்குள் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...