ஆதார் அட்டை கட்டாயமில்லை : உச்ச நீதிமன்றம்:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப்
பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை
தீர்ப்பளித்துள்ளது.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல்
செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று
கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.
திருமணத்தைப் பதிவு செய்ய மகாராஷ்டிராவில் ஆதார் அட்டை அவசியம் என்று
அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சுதந்திரம், சம உரிமை
போன்றவற்றுக்கு எதிராக ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று
கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பி.எஸ். சௌஹான் மற்றும்
எஸ்.ஏ. பாப்டே கொண்ட அமர்வு, அரசு வழங்கும் சேவைகளைப் பெற ஆதார் அட்டை
அவசியம் என்று பொதுமக்களை மத்திய, மாநில அரசுகள் கட்டாயப்படுத்தக் கூடாது
என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியிருப்பவர்களுக்கு ஆதார்
அட்டை வழங்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்க
மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள்
நடந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...