சென்ற தகுதித்
தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறிஅடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்கதொடங்கினகண்கள்...பயத்தோடு படிக்க
அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில்
கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால்
பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...
ஒரு வழியாக தேர்வை எழுதிவிட்டு மனதை தேற்றும் முன்னே தேடிவந்தன பிரச்சனைகள்..விடைகளில் ஆரம்பித்தவை அரசியல் விளையாட்டு
வரை சென்றது..மறு விடைகள், மறு முடிவுகள், மதிப்பெண்தளர்வு என மறுக்க முடியாத மாற்றங்கள்
மனதை சிதைத்தன...
உண்மையை சொல்லப்போனால்
தேர்வில் தோல்வியுற்றவர்களின் வலியை விட நாங்கள் பெற்றவை அதிகம்...இவ்வாறு அனைத்தையும்
தாண்டி அணையா விளக்காய் சுடர் விடுகிறது எங்கள் நம்பிக்கை..
ஆயிரக்கணக்கானவர்களின்எதிர்காலத்தை
தீர்மானிக்கப்போகும் இந்த ஆறு நாட்கள் சிலருக்கு ஆறுதலையும், சிலருக்கு வேதனையும் தரலாம்.கடவுள்
அனைத்தயும் கவனித்து கொண்டிருக்கிறார் நிச்சயம் ஒரு நாள் உழைப்புக்கான பலனை அளிப்பார்
என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்..
வரும் 30 ல் வரும்
முடிவை முற்றுப்புள்ளியாக கருதாமல் முன்னேற்றப்படியாக கருதுவோம்..இயன்ற வரை இன்பம்
கொடுக்க இறைவனை வேண்டுவோம்..
அனைவருக்கும் என்
இதயம் கணிந்த வாழ்த்துக்கள்....
by,
A.JAYAPRATHAPAN(Prathap
AN)
SEC.GRADE.TEACHER.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...