நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இதனிடையே, நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரி திருச்சியை சேர்ந்த சக்தி மலர்கொடி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படவில்லை, மருத்துவ மாணவர்களை நீட் தேர்வு மூலம் தேர்வு செய்யும் முறை ஒரே அளவீடாக இருக்காது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மே 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சி.பி.எஸ்.இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஜூன் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...