எங்கே இருக்கிறது மன நிம்மதி| ஒரு நிமிடம் படியிங்கள் இந்த கதையை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


எங்கே இருக்கிறது மன நிம்மதி| ஒரு நிமிடம் படியிங்கள் இந்த கதையை:

மனநிம்மதி இழந்த அரசன் ஒருவன் நிம்மதி வேண்டி துறவி ஒருவரை நாடிச் சென்றார். பல்வேறு கவலைகள் அவருடைய மனதை சூழ்ந்து கொள்வதால் எந்த ஒரு வேலையையும் மனநிம்மதியோடு செய்யமுடியாமல் தவிப்பதாகவும் அதிலிருந்து மீண்டு மன நிம்மதியோடு நாட்டை ஆட்சி செய்வதற்கான வழிமுறைகளை கூறி உதவிடுமாறு துறவியிடம் அரசர் கேட்டார்.

கவலைகள் இல்லாத மனிதர் ஒருவரின் சட்டையை வாங்கி ஒருநாள் அணிந்து கொண்டால் அரசரின் கவலை மறைந்து போகும் என்று துறவி கூறினார்.அரசரும் கவலைகள் இல்லாத மனிதர் ஒருவரை தேடினார். எதிரில் காண்போர்கள் அனைவரிடமும் அவர்களுக்கு கவலை இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்தார்,எல்லோரும் தங்கள் கவலைகளை அடுக்க ஆரம்பித்தார்கள்.
திருமணம் ஆனாலும் கவலை ,ஆகாவிட்டாலும் கவலை.வீரனுக்கும் கவலை, கோழைக்கும் கவலை.குழந்தையினுள்ளும் கவலை, முதியவருள்ளும் கவலை.கவலைகள் இல்லாத மனிதர்களை காணமுடியாமல் சலித்துப் போன அரசன் கடைசியில் கோயிலுக்குச் சென்றான். அங்கு கோவில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் ஆனந்தமாக பாடிக்கொண்டு இருந்தான். அவனைக்கண்ட அரசர் அவனிடம் சென்று
“இவ்வளவு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டிருக்கிறாயே, உனக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், “ கவலையா?, எனக்கென்ன கவலை. இந்த கோவிலின் வாசலில் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்" என்றான்.
அரசன் மகிழ்ச்சி அடைந்தான்.
“உன் சட்டையை எனக்கு ஒருநாள் வாடகைக்கு தருவாயா?” என்று அவனிடம் அரசர் கேட்டார்."சட்டையா? எனக்கு ஏது சட்டை ?", என்றான் அந்த பிச்சைக்காரன்.கவலைகளற்ற மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. இயற்கையால் படைக்கப் பட்ட நிலாவில் கூட களங்கங்கள் உண்டு. நிலாவில் மறைந்திருக்கும் களங்கங்களை நம் கண்கள் பார்த்தால் நிலாவில் நிறைந்திருக்கும் அழகை இரசிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என முடிவெடுக்கும் போது மகிழ்ச்சியே நம் வாழ்க்கையின் வழியாக மாறிப்போய்விடுகிறது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H