கலக்கும் கேரளா.. இயல்பு நிலைக்கு திரும்புகிறது.. ஓட்டல்கள் திறக்க ஓகே.. போக்குவரத்திற்கும் அனுமதி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கலக்கும் கேரளா.. இயல்பு நிலைக்கு திரும்புகிறது.. ஓட்டல்கள் திறக்க ஓகே.. போக்குவரத்திற்கும் அனுமதி:


திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை மறுநாள் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய, சிவப்பு மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான சேவைகள் திரும்புகிறது.
இந்தியாவுக்கு வழிகாட்டி... கொரோனாவை கேரளா எதிர்கொண்டது இப்படி தான்
இரவு 7 மணிவரை ரெஸ்டாரண்ட்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பது, முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்ட பிற சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதேநேரம், பொது போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை தொடரும்.
சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி மற்றும் பச்சை என நான்கு மண்டலங்களாக, கேரள மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் கேரளாவில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க தேவையான, விரிவான வழிகாட்டுதல்களை பினராய் விஜயன் அரசு, இன்று வெளியிட்டுள்ளது.

தளர்வுகள்
நான்கு மாவட்டங்கள்
சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகியவற்றில், எந்தவிதமான தளர்வுகளும் இருக்காது. மேலும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள ஹாட்ஸ்பாட்கள் சீல் வைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி மட்டும் திறந்திருக்கும்.




வாகன இயக்கம்
ரெஸ்டாரண்ட்
மண்டல வகைப்பாட்டின் அடிப்படையில் சிவப்பு மாவட்டங்களை தவிர்த்த பிற, மாவட்டங்களுக்குள் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப் படை திட்டத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும், மேலும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட இரவு 7 மணி வரை அனுமதி உண்டு. பார்சல் வாங்கிச் செல்ல இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்குள், குறுகிய தூரங்களுக்கு பஸ் பயணமும் அனுமதிக்கப்படும். இந்த அனைத்து சேவைகளுக்கும் கடுமையான சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.




மாவட்டங்கள்
ஆரஞ்சு பி மாவட்டங்கள்
ஆரஞ்சு ஏ மண்டலத்தின் கீழ் உள்ள மாவட்டங்களான, பத்தினம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில், லாக்டவுனிலிருந்து ஓரளவு தளர்வு ஏப்ரல் 24 முதல் வழங்கப்படும், அதே நேரத்தில் ஆரஞ்சு பி மாவட்டங்களான ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு மற்றும் திருச்சூர் ஆகியவை திங்கள்கிழமை முதல் தளர்வு பெறும்.




நோயாளிகள் எண்ணிக்கை குறைவு
கேரளா கலக்கல்
புதிய தினசரி நோயாளிகள் எண்ணிக்கையை, ஒற்றை இலக்க மட்டத்திற்கு குறைந்துவிட்டதால், மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் நோயாளிகள் எண்ணிக்கை புதிய சேர்க்கைகளை விட அதிகமாக இருப்பதாலும், கொரோனா வளைவை தட்டையானதாக மாற்றுவதில் கேரள அரசு வெற்றி பெற்றுவிட்டதாக நம்பப்படுகிறது. அரசு பெரிதும் நிர்வகித்துள்ளது. கடந்த 7 நாட்களில், 32 புதிய நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 129 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.




போக்குவரத்து
பசுமை மண்டலம்
பசுமை மண்டலத்தில் கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளதாக அரசு வகைப்படுத்தியுள்ளது, எனவே, திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகள் அங்கு முழுமையாக நீக்கப்படும். ஆனால், மாவட்டத்திற்குள் மட்டுமே போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும். பிற மாவட்டத்தினர் இங்கு போக முடியாது. இந்த மாவட்டத்துக்காரர்களும் வெளி மாவட்டங்களுக்கு போக முடியாது.




எப்படி நடக்கும்
வாகனங்கள் இயக்கம்
ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் அனுமதிக்கப்படும் சேவைகளை பாருங்கள்: ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை திட்டத்துடன் தனியார் வாகனங்களின் இயக்கம் அனுமதிக்கப்படும். ஒற்றைப்படை எண்களைக் கொண்ட வாகனங்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனுமதிக்கப்படும், அதே சமயம் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப்படை எண்களைக் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், கெடுபிடியில் விலக்கு என்பது முக்கியமான சேவைகள் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கு மட்டுமே. தனியாக அல்லது கூட யாரையாவது அழைத்துச் செல்லும் பெண்கள் என்றால் அவர்களை அரசு கேள்வி கேட்காது.
டூ வீலர், ஃபோர் வீலர்
விதிமுறைகள்
நான்கு சக்கர வாகனங்கள் என்றால், வாகன ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகளை மட்டுமே பின்சீட்டில் அமர அனுமதிக்க முடியும், இரு சக்கர வாகனங்களில் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். குடும்ப உறுப்பினர் என்றால் பின் சீட்டிலும் அமர அனுமதி உண்டு.
கடுமையான நெறிமுறைகளுக்கு உட்பட்டு, குறுகிய தூரத்திற்கு பஸ் பயணம் அனுமதிக்கப்படுகிறது. பயணிகள், முகக் கவசம் அணிவது கட்டாயம். சானிட்டைசர்களை பேருந்துகளுக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மொத்த பயண தூரம் 50 முதல் 60 கி.மீ.க்கு மேல் இருக்கக்கூடாது, இது மாவட்டத்திற்குள் மட்டுமே.




கடைகள்
முடி திருத்தும் கடை
முடிதிருத்தும் கடைகள் (காஸ்மெட்டிக்ஸ் / அழகு சிகிச்சைகள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஏ.சி. வசதியை பயன்படுத்த அனுமதி கிடையாது. ஒரே நேரத்தில் 2 பேர் மட்டுமே காத்திருக்க வேண்டும். அதற்கு மேல் கூட்டம் சேரக்கூடாது.




எப்படி நடக்கும்
உணவக கட்டுப்பாடு
இரவு 7 மணி வரை உணவருந்தவும், இரவு 8 மணி வரை பார்சல் வாங்கிச் செல்லவும் உணவகங்களுக்கு அனுமதி உண்டு. அனைத்து சுகாதார சேவைகளும் செயல்பட வேண்டும். மழைக்காலத்திற்கு முந்தைய சுகாதாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள், வேளாண்மை / தோட்டக்கலை / தோட்டக்கலை பொருட்கள் வாங்குவது, விற்பனை செய்தல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விவசாய மற்றும் தோட்டக்கலை நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு நபரும் வேலை செய்யக்கூடாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சரிபார்த்துக் கொள்வது ஒப்பந்தக்காரர் அல்லது முதலாளியின் பொறுப்பாகும்.




தடைகள்
பொதுப் போக்குவரத்து
பச்சை மாவட்டங்களில், பின்வருவனவற்றைத் தவிர பிற அனைத்து நடவடிக்கைகளும் ஏப்ரல் 20 க்குப் பிறகு அனுமதிக்கப்படும். பயணிகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணத்திற்கு அனுமதியில்லை. ரயில்கள் இயக்கம் கிடையாது. மாவட்டங்களுக்கும் இடையேயான பொது போக்குவரத்து தடைசெய்யப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. அனைத்து கல்வி, பயிற்சி, பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.




திரையரங்குகள் மூடல்
சினிமா தியேட்டர்கள்
அனைத்து சினிமா அரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் மூடப்பட்டிருக்கும். அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்களுக்கு தடை தொடரும். இறுதி சடங்குகள் மற்றும் திருமணங்களில், 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூட அனுமதிக்கப்படாது.




source: oneindia.com

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H