சென்னை :உள்ளூர் வெட்டுக்கிளிகள், விவசாயிகளின் நண்பனா என்ற திடீர்
சந்தேகம், வேளாண் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக
ஊடுருவிஉள்ள, பாலைவன வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர் சேதத்தை
ஏற்படுத்தி வருகின்றன.
இதனால், ராஜஸ்தானில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல், பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ராஜஸ்தானில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல், பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெருக்கடி
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல், ஜூலை இறுதி வரை நீடிக்கும். இது, 17 மாநிலங்களுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக விவசாயிகள் மத்தியில், இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், தமிழகம் வர வாய்ப்பில்லை என, மத்திய அரசு
கூறியுள்ளது.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல், ஜூலை இறுதி வரை நீடிக்கும். இது, 17 மாநிலங்களுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக விவசாயிகள் மத்தியில், இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், தமிழகம் வர வாய்ப்பில்லை என, மத்திய அரசு
கூறியுள்ளது.
அதே நேரத்தில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், உள்ளூர் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இது, விவசாயிகளுக்கு அச்சத்தையும், வேளாண் துறைக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
இதற்கு, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதனால், வேளாண் துறைக்கு புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்ளூர் வெட்டுக்கிளிகள், விவசாய நிலங்களில் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்துவது கிடையாது.
அங்கு வரும் பறவைகள், எலிகள் உள்ளிட்டவை, இந்த வெட்டுக்கிளிகளை விரும்பி சாப்பிடுகின்றன. இதனால், பயிர்கள் காக்கப்படுகின்றன. எனவே, இந்த வெட்டுக்கிளிகள், விவசாயிகளின் நண்பனாக உள்ளன.
நடவடிக்கை
மாலத்தீயான்
பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, இந்த வெட்டுக்கிளிகளை அழித்தால்,
விவசாயிகளுக்கு நன்மை செய்யும் மேலும் பல உயிரினங்களும் இறக்க நேரிடும்
என, விவசாயி கள் கூறுகின்றனர். எனவே, வேளாண் பல்கலை பரிந்துரைப்படி, இந்த
விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள்
முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...