அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி விலைவாசி உயர்வின் காரணமாக 10 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது:
ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை
மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து ஜூலை 2013
வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது. எனவே AICPIN குறியீட்டு எண்
படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 10% என்பது ஏறத்தாழ
உறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2013 முதல்
உயர்த்தக்கூடும். மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும்
உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி
தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம்
கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...