சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி:
சென்னை மருத்துவக் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பல வாரங்களுக்கு, இந்த பயிற்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட உள்ளது.
மன அழுத்தத்தால்
பாதிக்கப்படுபவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர்களே
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், நோயாளிகளின் நிலை மோசமாகிவிடும்.
இப்பிரச்னை வராமல், முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, சென்னை மருத்துவ
கல்லூரியில், கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு,
யோகா பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முதல், யோகா பயிற்சி துவக்கப்பட்டது. சென்னை,
அரும்பாக்கத்தில் உள்ள, அரசு யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவக்
கல்லூரியின் கூடுதல் பேராசிரியர், வெங்கடேஸ்வரன் பயிற்சி வழங்கினார்.
இதில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், கூடுதல்
பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாக
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியில், ஊட்டச்சத்து முறைகள்,
உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, மனக்கட்டுப்பாடு மற்றும்
எளியமுறையில் வாழ்வு முறையை மாற்றியமைத்தல் ஆகியவை அளிக்கப்படுகின்றன.
அலுவலக பணியில், வேலைப் பளு உள்ளவர்கள், 20 நிமிடம் யோகா பயிற்சி செய்ய
அறிவுறுத்தப்பட்டது. எளிய மூச்சுப் பயிற்சி, மூட்டுக்கள் மற்றும் சதைகள்
தளர்த்தலுக்கு பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து பல
வாரங்களுக்கு, இந்த பயிற்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து
வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...