அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊழியரின்றி பணிகள் தேக்கம்:
பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளர் உட்பட 5 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் தேக்கமடைந்துள்ளன.
இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3
ஆண்டுகளுக்கு முன் இளநிலை உதவியாளர், காவலாளி, பராமரிப்பாளர் உட்பட அலுவலக
பணிக்காக 5 பேர்கள் வரை இருந்தனர். இவர்களை படிப்படியாக மாறுதல்
செய்துவிட்டனர். இதனால், ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஊழியர்களை
நியமிக்கவில்லை. இதனால், பள்ளியின் அலுவலக பணிகள் அனைத்தும்
பாதிக்கப்பட்டுள்ளன. த
லைமை ஆசிரியரே அலுவலக பணிகள் அனைத்தையும் பார்க்கவேண்டிய
நிலை உள்ளது. காவலாளி இன்றி பள்ளி வளாகத்தில் இரவில் சமூக விரோத செயல்கள்
நடக்கின்றன. குடிமகன்கள் உள்ளே புகுந்து மதுபாட்டில்களை உடைத்து
செல்கின்றனர். பள்ளி வரும் மாணவர்கள் இவற்றை சுத்தம் செய்த பின்னரே
வகுப்பிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு தேவையான
ஊழியர்களை நியமிக்கவேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...