அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு:
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் திண்டுக்கல் நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், சிறந்த 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுசாரா
எரிசக்தி, புளியமரத்துக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு,
நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு ஆகிய படைப்புகள்
தேர்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பசுமை உலகம்,
நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியின் விவசாயத்தில் நீர் சேமிப்பு
ஆகிய படைப்புகளும், அம்மையநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பிளாஷ்டிக்
ஆற்றல், தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் மின்சாரம்,
கோபால்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மின்னணுவியல்,
கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் உடல் நலம் பேணல், பாடியூர் அரசு
உயர்நிலைப் பள்ளியின் மரபு சாரா எரிசக்தி ஆகிய படைப்புகள் தேர்வு
செய்யப்பட்டன.
ஒவ்வொரு படைப்புக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...