கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி:
திண்டுக்கல் மாவட்டத்தில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 155 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோ.ராமநாதபுரம், அணைப்பட்டி கள்ளர் பள்ளி, நத்தம் மகளிர் பள்ளி, நத்தம் கோவில்பட்டி ஆண்கள் பள்ளி, கோபால்பட்டி, திண்டுக்கல் மகளிர் பள்ளி, வேடசந்தூர் மகளிர் பள்ளி, பழநி மகளிர் பள்ளி ஆகிய 8 இடங்களில் கூடுதலாக தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.