வரும் கல்வி ஆண்டுக்கு மே.1ல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 65 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மே மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் டிசம்பருக்குள் மாணவர் சேர்க்கை முடிவதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகள் லாபநோக்கோடு மாணவர் சேர்க்கை நடத்துவதை தடுக்கவும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.








