தமிழைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்றார் மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். நாமக்கல்
அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில், சிலப்பதிகாரச் சிந்தனை
மன்றம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி
முதல்வர் வே.ராதா தலைமை வகித்தார். இதில், சிலம்பொலி செல்லப்பன்
பேசியதாவது:
வேறு மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களை
முன்னிலைப்படுத்தியதாகவே இருக்கும். ஷேக்ஸ்பியர் எழுதிய 38 நாடகங்களில்
2-இல் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும்,
ஆண்களுக்குப் பிறகுதான் பெண்கள் வருவார்கள். ஆனால், தமிழ் மொழியில்
மட்டும்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெண்களை முன்னிலைப்படுத்திய
இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இலக்கியங்களை மாணவர்கள் ஆராய்ச்சித் திறனோடு கற்க வேண்டும். அப்போதுதான் அதன் பெருமையை உணர முடியும். பேச்சு, நடிப்பு எதுவானாலும் தொடக்கம் நன்றாக இருந்தால், அதற்கு சிறப்பு தானாக வந்துவிடும். தமிழன் நேர்மறையாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இதற்கு காரணம் இலக்கியங்கள் எதிர்மறையாகப் பேசக் கற்றுக் கொடுக்கவில்லை. தமிழ் மொழியில் சொற்களுக்கு எந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும், அந்த எழுத்தை எப்படி விளக்குவது போன்றவை இப்போது பலருக்கும் தெரிவதில்லை. இலக்கியங்களை ஆழ்ந்து படித்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பிழையின்றி எழுத இலக்கியங்களைக் கற்க வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழர்கள் இப்போது தங்கள் நாகரிகத்தையும், பண்பாட்டையும் தொலைத்து விட்டனர். நம் நாகரிக சிறப்பை இலக்கியங்கள்தான் உலகுக்குக் கொண்டு செல்கின்றன. அதை தமிழர்கள் படித்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...