அண்ணாமலை பல்கலைக்கழகம் செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு:
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை
கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி
நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.