ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கவுன்சிலிங் எப்போது?
தமிழகம் முழுவதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும், பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆன்லைன் மூலம், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடைபெறும்.
மாறுதல் கோரி விண்ணப்பிக்காத தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர்கள், ஆன்லைன் பொது மாறுதலில் கலந்து கொள்ள இயலாது. பட்டதாரி
ஆசிரியர்கள், காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்கள்
ஆகியோருக்கு, ஆன்லைன் பொது மாறுதல் தொடர்பான விவரம், தனியே
அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...