முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையதள கலந்தாய்வு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை இன்று வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர் தாவரவியல் பாடத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கு
இணையத்தள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகத்தில் இன்று(27.05.2013) வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று முதன்மைக்
கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். அதேபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம்
மூலம் தொகுதி 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர்கள் பணிக்கு தேர்வு பெற்று
பள்ளிக் கல்வித் துறைக்கு, துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச்
சேர்ந்த பணி நாடுனர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.