புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு:
"புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.குடியிருப்பு பகுதிகளில், மக்கள் தொகை 300 பேருக்கு, ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்தாண்டு, கள ஆய்வு செய்தனர். ஆய்வில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது.
இப்பகுதிகளில், புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர், அரசிடம் வழங்கினார். அதன்படி, 2013-14ல் துவங்க உள்ள, தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நிர்ணயம், தர ஊதியம் குறித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.அதில், புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800; தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...