ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்:
அடுத்த இரு ஐந்தாண்டு திட்டங்களில் மத்திய அரசு உயர்கல்விக்கென 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது" என, பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.
கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
"எவ்வளவு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான
கல்வி போதிக்க ஆசிரியர்கள் அவசியம். இதை மனதில் வைத்து ஆசிரியர்களின்
தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல்கலை ஒன்றை ஆந்திர
மாநிலம் காக்கிநாடாவில் பல்கலை மானியக் குழு உருவாக்கியுள்ளது.
அடுத்த 2 ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்வியை மேம்படுத்த
மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதில், 25
ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பாக செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களில்
தொழில் சார்ந்த கல்வி அளிக்கவும், பாடங்களை உருவாக்கவும் வழங்கப்படும்.
மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் பல்கலை மானியக் குழுவுக்கு
உயர்கல்வி மேம்பாட்டுக்கு செலவிட வழங்கப்படும். இந்திய கலாசார
மேம்பாட்டுக்கும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிதி செலவிடப்படும்." இவ்வாறு, தேவராஜ்
பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...